×

சூழவாய்க்காலில் காங். நலத்திட்ட உதவி ஊர்வசி அமிர்தராஜ்

ஏரல், பிப்.16:சூழவாய்க்காலில் தெற்கு மாவட்ட காங். சார்பில் கொடியேற்றி நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை வகித்து கொடியேற்றினார். தொடர்ந்து அவர் 600 பேருக்கு வேஷ்டி, சேலை உட்பட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் வை. கிழக்கு வட்டார தலைவர் தாசன், ஊர் பிரமுகர்கள் ராமையா, யூனஸ் அலி, சுபையர், காஜா, கருப்பசாமி, சிறுத்தொண்டநல்லூர் இர்ஷாத், ஜெயசங்கரபாண்டியன், தர்மலிங்கம், கீதா, அருணாச்சலம், சுதன், வாசுதேவன், மொட்டத்தாதன்விளை செல்வராஜ், சக்கம்மாள்புரம் நெல்சன், லிவிங்ஸ்டன், சிவகளை பிச்சையா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன் துரை, ஏரல் நகர தலைவர் பாக்கர்அலி, மாவட்ட பொதுச் செயலாளர் இசைசங்கர், மாவட்ட பொருளாளர் எடிசன், ஊடகபிரிவு முத்துமணி மரியராஜ், பஞ்.தலைவர் வேங்கையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் ஊர்மக்கள் சார்பில் சூழைவாய்க்காலில் பழமையான பாலத்தை அகலப்படுத்தி தர வேண்டும். தொடக்க பள்ளியை தரம் உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

Tags : Urvasi Amirtaraj ,
× RELATED மாங்கொட்டாபுரம் பஞ்சாயத்து...